என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
    • பிரதமர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    டெல்லியில் இன்று நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கைகலுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை புதின் ஏற்றுக்கொண்டார்.

    அங்கிருந்து புறப்பட்ட புதபின் ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. தொடர்ந்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.

    பின்னர் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது கேள்வி எழுப்பினார்.
    • நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை.

    டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது, ஒரு டாலருக்கு ரூ.90க்கும் கீழே சரிந்துள்ளது.

    நேற்று காலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் 28 பைசாக்கள் சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு ரூ.90.43 ஆகக் குறைந்தது.

    இந்நிலையில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி விமர்சித்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    "ரூபாய் மதிப்பு ஏன் சரிந்து வருகிறது? பிரதமரிடம் நரேந்திர மோடியின் கேள்வி" என்ற தலைப்பில் மோடியின் வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

    அந்த வீடியோவில், "நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி பேசியுள்ளார்.

    • ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
    • பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார்.

    தலைநகர் டெல்லி வந்தடைந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் புதின் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார். மாநாட்டுக்கு இடையே மோடி-புதின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கும் அவர்கள், கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.

    • நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.
    • தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன.

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு.

    * பீகாரில் நடந்து முடிந்து தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு கூறியுள்ளது.

    * நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.

    * குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    * இந்த கூட்டத்தொடர், இந்த நாடாளுமன்றம் நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறது, நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை, வலுவான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்.

    * தோல்வியின் ஏமாற்றத்தை அவர்கள் கடக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன. பீகார் முடிவுகள் வந்து இவ்வளவு நாள் கடந்துவிட்டதால், அவர்கள் கொஞ்சம் அமைதியடைந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் நேற்று நான் கேள்விப்பட்டதிலிருந்து, தோல்வி அவர்களை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது.

    * விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து பணியாற்றுமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார். 



    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஹேடன் என்பரை இன்று திருமணம் செய்து கொண்டார்
    • ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    2022 முதல் ஆஸ்திரேலியாவின் பிரதமராக செயல்பட்டு வரும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆண்டனி அல்பானீஸ்க்கு வயது 62. தனது காதலியான 46 வயது ஜோடி ஹேடன் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஜோடி ஹேடனிடம் அல்பானீஸ் காதலை கூறிய நிலையில் இன்று பிரதமர் குடியிருப்பில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    இந்நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எனது நல்ல நண்பர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் திருமதி ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

    2019ல் தனது முதல் மனைவி கார்மலை அந்தோணி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
    • ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும்.

    கோவாவில் குஷாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி, 77 அடி உயர பிரமாண்ட ஸ்ரீ ராமர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மடம் உருவாக்கிய 'ராமாயண கருப்பொருள் பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.

    சிலைத் திறப்புக்குப் பிறகு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா தற்போது ஒரு பிரம்மாண்டமான கலாசார மறுமலர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய இந்தியா புதிய தீர்மானங்கள் மற்றும் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையுடன் தனது கலாசார அடையாளத்தை முன்னெடுத்துச் செல்கிறது.

    அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது, காசி விஸ்வநாதர் கோவில் மறுசீரமைக்கப்படுவது, மற்றும் உஜ்ஜயினியில் மகாகால்  கோவில் விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

    நம் இளைஞர்களின் ஆற்றல், வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாசார வேர்களுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு அனைத்தும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை வடிவமைக்கின்றன.

    ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும். மேலும் மக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுதேசி பொருட்களை வாக்குகுதல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார்

    கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிலையில், கர்நாடகாவின் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கோவா பயணமானார். அங்கு மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை திறந்துவைத்துள்ளார்.

    இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
    • அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயற்கை பேரிடரால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

    நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுடன், இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR உதவியை அவசரமாக அனுப்பியுள்ளது. மேற்கொண்டு உதவி மற்றும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இந்தியா அதன் தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.
    • கடைசியாக பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.

    ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் பயணமாக டிசம்பர் 4-ந்தேதி இந்தியா வர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியுடன் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷிய அதிபர் புதினின் அரசு முறை பயணம், இந்தியா - ரஷியாவின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும்.

    சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை குறித்த தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று தெரிவித்துள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் புதின் இந்தியா வருகிறார்.

    இந்திய பயணத்தின்போது ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடைசியாக பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றனர். 

    • உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது
    • நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது.

    டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தீபாவளி அன்று பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாஜக அரசு வழக்கு தொடர்ந்து சாதகமாக தீர்ப்பு பெற்றது. எனவே பல வருடம் கழித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    இந்த நடவடிக்கையை ஆர்வலர்கள் விமர்சித்தனர். தீபாவளிக்கு பின் டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் செயற்கை மழை பெய்ய செய்ய ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் டெல்லி ஐஐடி மேற்கொண்ட சோதனை தோல்வி அடைந்தது.

    கடந்த சில வாரங்களாகவும், இன்றும் டெல்லி காற்றின் தரம் AQI 400 ஐ தாண்டி 'மிகவும் மோசம்' என்ற வகையை அடைந்துள்ளது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காற்று மாசினால் ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலை குறித்து மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மோடியின் பாராமுகம் குறித்து விமர்சித்துள்ளார்.

    டெல்லியில், தாய்மார்கள் சிலருடன் தனது வீட்டில் ராகுல் காந்தி காற்று மாசு குறித்து கலந்துரையாடி அதன் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், நான் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் என்னிடம் ஒரு விஷயத்தை தான் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தை மாசுபட்ட காற்றை சுவாசித்து வளர்வது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் பயத்துடனும், கோபத்துடன், ஏதும் செய்ய முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.

    மோடி அவர்களே,"இந்தியாவின் குழந்தைகள் நமது கண் முன்னே மூச்சுத்திணறி கொண்டுள்ளனர். நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். இந்த பிரச்சனையில் உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், காற்று மாசு விவகாரம் குறித்த பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் செய்யப்பட வேண்டும். இதை சுகாதார அவசரநிலையை கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது, எனவே இந்த விஷயத்தில் இனியும் எந்த சாக்கு போக்குகளும், திசை திருப்புதலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

    வரும் வாரத்திலும் டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையிலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1 லட்சம் பேர் கீதை பாராயணம் செய்யும் லட்ச கீதை பாராயண நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மங்களூரு வந்தார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் ரோடு ஷோவாக வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தங்க கதவை திறந்து கோவிலுக்குள் சென்று மத்வ சரோவரில் தீர்த்த அபிஷேகம் செய்து கிருஷ்ணரை தரிசனம் செய்தார். தொடர்ந்து தங்க தீர்த்த மண்டபம் வழியாக கிருஷ்ண மடத்தின் மடாதிபதி தீர்த்த சுவாமிகளை சந்தித்து தீர்த்த பிரசாதம் பெற்றார்.

    தொடர்ந்து பிரதமர் மோடி லட்ச கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கோவா புறப்பட்டு செல்கிறார்.



    ×