என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"
- 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
- ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.
புதுடெல்லி :
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.
ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?
ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.
Modi Sarkar has gone. It was BJP Sarkar for a few days. Since yesterday it is NDA Sarkar
— P. Chidambaram (@PChidambaram_IN) April 27, 2024
Have you noticed the dramatic change that has happened since April 19?
The Congress' manifesto was ignored by Mr Modi between April 5 and April 19. After the first phase of polls on April…
மற்றொரு பதிவில்,
நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.
2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.
News from states where polling took place on April 26 is very encouraging for the Congress
— P. Chidambaram (@PChidambaram_IN) April 27, 2024
Kerala takes the pride of place. UDF is expected to repeat the splendid performance of 2019
In Karnataka's 14 seats that went to polls yesterday, Congress will vastly improve its score…
- அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை கருநாக பாம்பு என தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு மூன்று சட்டங்களை திரும்ப பெற செய்வதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மோடிக்கு எதிராக போராடினார்கள்.
இதனால் அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி மோடியை வற்புறுத்தினார்கள்.
இந்த சம்பவத்தை மோடி ஒருபோதும் மறக்க மாட்டார். அவர் கருநாகம் போன்றவர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி விவசாயிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 400 இடங்களில் வெற்றி பெற நினைக்கிறார்.
அதுபோல் நடந்தால் விவசாயிகளை கடிக்க மோடி மீண்டும் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் புதுச்சேரி சமூக அமைப்பினர் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது. ஆனால் பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது பேச்சின் தாக்கம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருவரது மனங்களிலும் எத்தகைய தாக்கம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிட்டு இந்தியாவில் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார்.
- 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
நீங்கள் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டிருப்பீர்கள். அவர் பயப்படுகிறார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார். 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
400 இடங்களில் வெற்றி என்பதை இலக்காக வைத்து பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. முதல் கட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் பா.ஜனதா பிரச்சனையை திசைதிருப்ப முயற்சிக்கிறது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. பாஜனதாவுக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.
- நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
- திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.
கொல்கத்தா:
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.
நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.
ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.
வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.
திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
- அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.
பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் குற்றச்சாட்டு.
- காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என காங்கிரஸ் பதில்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுத்தியுள்ளார்.
இரண்டு பக்க கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என கார்கே அதில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க உங்களை சந்திக்கும் நபராக நான் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள் தவறான அறிக்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சனம் செய்திருந்தார்.
தேர்தல் அறிக்கையின் ஒரு வரியை வைத்துக்கொண்டு பேசக்கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது.
- கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் குமாரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக முழுவதும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
அவர் அறிவித்த 24 மணி நேரத்தில் சோழவந்தான் தொகுதியில் உள்ள குமாரம், அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர், இளநீர், சர்பத் உள்ளிட்ட நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே எடப்பாடியார் நீர் மோர் பந்தலை திறக்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று உள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 7000 போலீசார் காவல் பணியில் இருந்தனர். ஆனால் அப்படி இருந்தும் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.
சித்திரை திருவிழாவில் ராமராயர் மண்டபத்தின் அருகே பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் மோதி ஒரு இளைஞரை கொலை கொலை செய்தனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அதேபோல் மதுரையில் வேலை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பிய ஒருவரை மது, கஞ்சா அருந்தியவர்கள் அவரை தாக்கியுள்ளார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில், ஜாபர் சாதிக் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் கஞ்சா கடத்தியுள்ளார். தற்போது சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடைபெற்று ஆயுதக்கிடங்காக தமிழகம் மாறியது மட்டுமல்ல, தற்போது போதை பொருள் கிடங்காக மாறிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும், தேர்தல் பிரசாரத்திலும் எடப்பாடியார் எடுத்துரைத்து வருகிறார். அவர் எடுக்கின்ற தியாக வேள்விக்கு மக்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் மக்களை மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசக்கூடாது, சட்டம் அனைவருக்கும் சமம். உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல, இது போன்று நாடு சந்தித்தது இல்லை தற்போது மரபை மீறி உள்ளார்களா? என்று அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து300 வாக்குச்சாவடி உள்ளது. இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். பி.ஜே.பி.க்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது.
தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனாலும் தேர்தல் ஆணையம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி, எப்படியாவது நாற்காலியைப் பெற வேண்டும் என்று பல்வேறு விளையாட்டுகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி மூலம் உங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் பறித்து விடும்.
போபால்:
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு நாட்டை விட பெரிது எதுவுமில்லை. காங்கிரசுக்கு அதன் சொந்த குடும்பமே முக்கிய அளவுகோல். நாட்டிற்காக அதிகபட்ச பங்களிப்பையும், உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்பவரை பின்னால் நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை. எனவே, பல ஆண்டுகளாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்கவில்லை.
எங்களது அரசு அமைந்தவுடன் ஒன் ரேங்க்-ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தினோம்.
காங்கிரஸ், வளர்ச்சிக்கு எதிரான கட்சி. காங்கிரஸ் மீண்டும் மதத் துவேஷத்தை கைக்கூலியாகப் பயன்படுத்துகிறது. கர்நாடக காங்கிரஸ் அரசு அங்குள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் என்று அறிவித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் சமூகத்தில் பல புதிய நபர்களை காங்கிரஸ் சேர்த்தது. முன்பு இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் கல்வி, அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெற்றனர். ஆனால் தற்போது அவர்கள் பெற்ற இட ஒதுக்கீடு ரகசியமாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில் சட்டவிரோதமாக காங்கிரஸ் சேர்த்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரின் உரிமையை கர்நாடக காங்கிரஸ் அரசு பறித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை தடுக்க காங்கிரஸ் விரும்புகிறது.
பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் பல ஆண்டுகளாக சதி செய்து வருகிறது. நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை என்று காங்கிரஸ் சொல்கிறது, அதே சமயம் ஏழைகளுக்குத் தான் முதல் உரிமை என்று நான் சொல்கிறேன்.
பா.ஜ.க. அரசு 80 கோடி மக்களுக்கு மத பாகுபாடு இல்லாமல் இலவச ரேஷன் வழங்கியுள்ளது. ஒரு முஸ்லிம் என்பதற்காக ஒருவருக்கு இலவச ரேஷன் கிடைப்பதில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். ஆனால் அதை காங்கிரஸ் பின்வாசல் வழியாக அளித்துள்ளது.
மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி, எப்படியாவது நாற்காலியைப் பெற வேண்டும் என்று பல்வேறு விளையாட்டுகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி மூலம் உங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் பறித்து விடும். மக்களின் சொத்துக்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை எக்ஸ்ரே மூலம் சோதனை செய்து, மக்களின் நகைகள் மற்றும் சிறு சேமிப்புகளை பறிமுதல் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
- தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். 30-ந்தேதி ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று மாலை ஸ்ரீரங்கம் பள்ளி தொகுதியில் ஐடி ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார்.
- பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பெங்களுரு:
கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக நாளை (26-ந்தேதி) 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே-7-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மீண்டும் 5-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி கர்நாடக வருகிறார்.
மதியம் 1 மணியளவில் தாவணகெரே தொகுதி பா.ஜனதா வேட்பாளர் காயத்ரி சித்தேஷ்வர், ஹாவேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் பொம்மை ஆகியோரை ஆதரித்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
- நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.
புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் 'மங்கள்சூத்ரா' கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:-
புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களாக நம்மை மறக்கடிக்க பல விசித்திரமான பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள்.
இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பதால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்